விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து...

 
Published : Jul 22, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து...

சுருக்கம்

fire accicent in matchbox factory

விருதுநகரில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுயில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலடிப்படியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆலையில் தீ பரவியதை அடுத்து, அருகில் இருந்தோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ மளமளவென்று எரிவதை அடுத்து அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலையில், யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை. ஆனாலும், தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
அன்புமணி மீதான ஊழல் வழக்குகள்.. சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்துங்க.. ராமதாஸ் கோரிக்கை