Urban election: தேர்தல் பரப்புரை நேரம் நீட்டிப்பு..காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்..

Published : Feb 11, 2022, 03:19 PM IST
Urban election: தேர்தல் பரப்புரை நேரம் நீட்டிப்பு..காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்..

சுருக்கம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.  

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள 20 நபர்கள் வரை அனுமதி, திறந்தவெளி மைதானங்களில் 1,000 நபர்கள் வரையும் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50% என இதில் எது குறைவான எண்ணிக்கையோ அந்த அளவில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி, கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. தற்போது தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் கட்சி மாற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதால் அரசு சார்பில் எவ்வித புதிய திட்டங்கள், நிகழ்ச்சிகள் அல்லது சலுகைகள், மானியங்களை அளிக்கவோ அல்லது அது தொடர்பான வாக்குறுதிகளை வழங்குவது, அடிக்கல் நாட்டுவது போன்ற செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

வருகிற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடமாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள், ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்யும் நேரத்தை அதிகரித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதல் நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அன்புமணி மீது சிபிஐயில் கடும் புகார்..! வயிற்றில் வாயில் அடித்துக் கொள்ளும் ராமதாஸ் குரூப்
விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!