குடியாத்தத்தில்..."தை பூசம்" பூஜையில் நிகழ்ந்த அதிசயம்..! "இரட்டை  தேங்காய்"..!

Asianet News Tamil  
Published : Jan 31, 2018, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
குடியாத்தத்தில்..."தை பூசம்" பூஜையில் நிகழ்ந்த அதிசயம்..!  "இரட்டை  தேங்காய்"..!

சுருக்கம்

double coconut in gudiyattam on thai poosam today

தை பூசம் அன்று நிகழ்ந்த அதிசயம்..! குடியாத்தத்தில் இரட்டை  தேங்காய்..!

ஜனவரி 31 ஆம் தேதியான  இன்று பல முக்கிய நிகழ்வுகள் அடங்கிய  தினம் என்றே கூறலாம்...

ஒரு பக்கம் தை பூசம்,மற்றோர் பக்கம் இன்று மாலை நிகழ உள்ள முழு சந்திர கிரகணம்..

தை பூசம் சிறப்பு பூஜைகள்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம்  குடியாத்தத்தில் மோகன்  என்பவரின் வீட்டில் தை பூச  நாளான  இன்று, முருக பெருமானுக்கு பூஜை செய்து தேங்காய் உடைக்கும் போது ஒரே தேங்காயினுள் இரண்டு தனி தனி தேங்காய் கொப்புரையாக இருந்துள்ளது.

இரட்டை தேங்காய் 

இந்த நிகழ்வை அறிந்த அக்கம் பக்கத்தினர் தை பூசம் நாளான இன்று இரட்டை தேங்காய்  வந்துள்ளதே என ஆச்சர்யப்பட்டு,இந்நன்நாளில் இது போன்று நிகழ்ந்துள்ளது  மிகவும் நல்லதே  என்று  கூறி சென்று உள்ளனர்.

இந்த  தேய்காய் போட்டோ தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!