மெரீனாவில்  பதற்றம்....!! கொட்டியது கச்சா எண்ணெய்...!! செத்து மிதக்கிறது உயிரினம் ....!!

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
மெரீனாவில்  பதற்றம்....!! கொட்டியது கச்சா எண்ணெய்...!! செத்து மிதக்கிறது உயிரினம் ....!!

சுருக்கம்

மெரீனாவில்  பதற்றம்....!! கொட்டியது கச்சா எண்ணெய்...!! செத்து மிதக்கிறது உயிரினம் ....!!

இரண்டு  கப்பல்கள் மோதிய  விபத்தில்,  கச்சா எண்ணெய் கசிந்ததால் மீன்கள், ஆமைகள் செத்து மிதக்கின்றன.

எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கப்பலின் டீசல் எண்ணெய் கடலில்  கசிந்துள்ளது. இந்த  விபத்தால்,  குறைந்த பட்சம் ஒரு டன் டீசல் கடலில் கலந்திருக்கலாம் என  கூறப்படுகிறது.

பிரித்தெடுக்கும் பணி  தீவிரம் :

 கச்சா  எண்ணெய்  கசிந்து,  கடல் நீரில்  கலந்துள்ளதால், தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்போது மாசுப்பட்ட கடல்நீரை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

எப்படி நடந்தது இந்த விபத்து ?

கடந்த 27ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 கடல் மைல் தூரத்தில் வந்த 2 கப்பல்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  இந்த  நிகழ்வு  நடைப்பெற்றுள்ளது. பின்னர்,   தகவல் அறிந்து  வந்த சென்னை கடலோர பாதுகாப்பு படையினர்,  இரண்டு கப்பல்களையும்  மீட்டனர்.

எங்கெல்லாம் கச்சா எண்ணெய் பரவியது ?

கடல் முழுவதும், எண்ணெய் கலந்து எண்ணூர், திருவொற்றியூர், எர்ணாவூர் கடற்கரை முழுவதும் டீசல் படிந்து காட்சி அளிக்கிறது. இதன் விளைவாக  தற்போது பல  உயிரினம் செத்து மிதந்து வருகிறது.

ஆமைகள்  மற்றும் மீன்கள் :

இந்த  விபத்தால்,  தற்போது வரை 4 கடல் ஆமைகள், ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன என்பது  குறிபிடத்தக்கது.மேலும் , இந்த டீசல்  சுமார், 200 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோர கற்களில் டீசல் படிந்து உள்ளது என்பது  குறிபிடத்தக்கது.

இதன் விளைவாக மேலும், எந்தஅளவுக்கு உயிரினங்களுக்கு  பாதிப்பு  ஏற்படக்கூடுமோ என்ற  அச்சம்  தற்போது எழுந்துள்ளது.  

 

 


 

 

PREV
click me!

Recommended Stories

திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!