வாயை விட்டு மாட்டி கொண்ட எச்.ராஜா; தொடரும் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள்...

First Published Mar 9, 2018, 9:18 AM IST
Highlights
condemning H. Raja speech political parties held in Demonstrations


தருமபுரி

பெரியார் சிலையையும் உடைக்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், திமுகவினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், பெரியார் சிலையையும் உடைக்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் பேச்சைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஏரியூர் செல்வராஜ், விவசாய விடுதலை முன்னணி செயலாளர் கோபிநாத் மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த  ஆர்ப்பாட்டத்தில்  தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராசேந்திரன், கீரை விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் சாக்கன்சர்மா, பாரதிராஜா, கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த குமார், மாது, சிசுபாலன், ரவீந்திரபாரதி, அல்லிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
 

click me!