Tamilnadu Rains : மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு ‘கனமழை’ கொட்டப்போகுது..

Published : Feb 21, 2022, 02:04 PM IST
Tamilnadu Rains : மக்களே உஷார் !! 4 நாட்களுக்கு ‘கனமழை’ கொட்டப்போகுது..

சுருக்கம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் தமிழக மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை பிப் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென் காசி, நெல்லை, குமரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் நாளை மறுநாள் பிப் 23-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

25-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பணிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்’ என்று கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!