
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்வதற்கு தவெக அரசு அதிரடியாகத் தடை விதித்து, திட்டத்தைக் கைவிட்டுள்ளது.