தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்... மயக்க மருந்து கொடுத்து மகளை கற்பழித்து கர்பமாக்கிய கொடூரம்...

First Published Apr 27, 2018, 6:22 AM IST
Highlights
auto driver who was in illegal relationship with mother was raped her daughter


 
திருவள்ளூர்

திருவள்ளூரில் தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் 12 வயது மகளை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து, கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தை, தாயுடன் வசித்துவரும் இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். 

நிஷாவின் தாயாருக்கும், திருநின்றவூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பரமசிவம் (48) என்கிற ஆட்டோ ஓட்டுநருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கள்ள உறவு ஏற்பட்டது.

பரமசிவத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவருடைய நடவடிக்கைகள் பிடிக்காததால் பரமசிவத்தின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து பரமசிவம் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டு தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்துபோன பிறகும், அவர் நிஷாவின் தாயாருடனான தனது கள்ள உறவைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, கடைக்கு சென்ற நிஷாவின் தாயார் குளிர்பானம் வாங்கி அதனை பரமசிவத்திடம் கொடுத்து தனது மகளுக்கு கொடுக்கும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்.

அப்போது, பரமசிவம் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து நிஷாவிடம் கொடுத்தார். அதைக் குடித்த நிஷா சற்று நேரத்தில் மயங்கினார். உடனே பரமசிவம் நிஷாவை கற்பழித்தார்.

மயக்கம் தெளிந்ததும் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து, அறிந்து நிஷா கதறி துடித்தாள். அப்போது பரமசிவம், "இங்கு நடந்தத்ஹை பற்றி யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் தாயையும் கொலை செய்துவிடுவேன்" என்று நிஷாவை மிரட்டினார்.

இதனால் பயந்துபோன நிஷா இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பரமசிவம் நிஷாவை மிரட்டி பலமுறை கற்பழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிஷாவுக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை, தாயார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷாவின் தாயார் அவளிடம் இதுபற்றி விசாரித்தார். அப்போது நிஷா தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தாயிடம் எடுத்துரைத்தார். 

இதனையடுத்து, சிறுமியின் தாயார் இது பற்றி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்கு பதிந்து சிறுமியை கற்பழித்து, கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் பரமசிவத்தை நேற்று கைது செய்தனர். 

பின்னர், காவலாளர்கள் அவரை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புழல் சிறையில் அடைத்தனர். 
 

click me!