
அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு திடீரென எடுக்கப்பட்ட ஒன்று அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த சில காலங்களாகவே கட்சியின் தேசியத் தலைமைக்கும், அவருக்கும் இடையே நிலவி வந்த சில உள்கட்சி முரண்பாடுகளும், தமிழ்நாட்டில் பாஜாகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளும் அவரை இந்த புதிய பாதையை நோக்கித் தள்ளியுள்ளன.