தீபாவளி போனஸ் கோரி அக்டோபர் 17 ஆம் தேதி வேலை நிறுத்தம் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி போனஸ் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
அவர்களின் வேலை நிறுத்தத்தால், நோயாளிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாவார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.