பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி 6 பேர் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Mar 27, 2019, 11:41 AM IST
Highlights

திருவாரூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை நகரில் சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல இன்று காலை சுரேஷ், பாபு, வீரப்பன், அறிவு, மோகன், சிங்கராவேலு ஆகிய 6 பேர் பட்டாசு கிடங்கில் வேலை பார்த்து வந்தனர். 

அப்போது திடீரென கிடங்கில் தீப்பற்றியது. உடனே அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கிடங்கு முழுவதும் தரைமட்டமானது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனையடுத்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!