வனத்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய மக்கள் .. - காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு தராததால் கிராமவாசிகள் ஆத்திரம் ..

Published : Aug 17, 2019, 12:36 PM ISTUpdated : Aug 17, 2019, 12:52 PM IST
வனத்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய மக்கள் .. - காட்டு யானைகளிடம் இருந்து  பாதுகாப்பு தராததால்  கிராமவாசிகள் ஆத்திரம்  ..

சுருக்கம்

காட்டு யானைத் தாக்குதல்களில் இருந்து முறையான பாதுகாப்பு வழங்காததால் , கிராமமக்கள் சேர்ந்து வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கினர் .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கிறது தேனிக்கோட்டை கிராமம் . இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் மலையில் இருந்து இறங்கி வந்து பயிர்கள் , வீடுகள் போன்றவற்றை சேதப்படுத்திச் செல்கிறதாம் . உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன .

இதுகுறித்து பலமுறை வனத்துறையிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .இந்த நிலையில் தான் கிராமத்தில் இருக்கும் அம்பையா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரை காட்டுயானை தாக்கியுள்ளது . இதில் அம்பையா சம்பவ இடத்திலேயே பலியானார் .கடுமையான காயங்களுடன் நாகராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தில் திரண்டனர் . பலமுறை புகார் அளித்தும் காட்டுயானைகளை விரட்டுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வனத்துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர் .

பின்னர் காவல்துறை வந்து சமாதானம் பேசி அவர்களை களைந்து போகச்  செய்தனர் .

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்