தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை.!

By vinoth kumarFirst Published Jul 15, 2021, 12:21 PM IST
Highlights

கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனையத்து, பாதிப்பு குறைந்ததையடுத்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் 
காகர்லா உஷா நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனையத்து, பாதிப்பு குறைந்ததையடுத்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், 2வது அலை தோடங்கியதால் மீண்டும் தொற்று அதிகரித்ததன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டே இருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால்  பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்களிடம் கேட்டால்  இதுதொடர்பாக முதல்வர் தான்  முடிவுகளை அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளனர். 

இதுபோன்ற சூழ்நிலையில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் நாளை  ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக  கூறப்படுகிறது. இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

click me!