மைசூரு-சென்னை இடையே.. புது வந்தே பாரத் ரயில் ஆரம்பம்.. நேரம் எப்போ தெரியுமா?

By Raghupati RFirst Published Apr 5, 2024, 2:58 PM IST
Highlights

பெங்களூரு வழியாக மைசூரையும், சென்னையையும் இணைக்கும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று  தொடங்குகிறது.

இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், ஆனால் இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான பயண முறையும் கூட. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பயணத்திற்காக இந்திய ரயில்வே ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். அதிக தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே தனது ரயில்கள் மற்றும் வழித்தடங்களை புதுப்பித்து மேம்படுத்துகிறது, அதன் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிக்கிறது, மேலும் உயர் தொழில்நுட்ப ரயில்களில் ஒன்றான வந்தே பாரத் ரயில்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

பயணிகளின் வசதிக்காக அனைத்து வழிகளிலும் வந்தே பாரத் ரயில்களை கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முயற்சித்து வருகிறது. சமீபத்தில், பெங்களூரு வழியாக மைசூரையும் சென்னையையும் இணைக்கும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரீமியம் ரயிலை பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் மைசூருவில் செய்யப்பட்டுள்ளதாக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) மஞ்சுநாத் கனமதி தெரிவித்தார். 

இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி வந்தே பாரத் ரயிலை நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 4 வரை, புதிய வந்தே பாரத் SMVT பெங்களூரு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ஓடியது.  இப்போது, வெள்ளிக்கிழமை முதல் வந்தே பாரத் ரயில் (20663/20664) கேஎஸ்ஆர் பெங்களூரு வழியாக மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும். ஏப்ரல் 5 முதல் ஜூலை 29 வரையிலான கால இடைவெளியில், புதன்கிழமை ரயில் இயக்கப்படாது. அதன்பிறகு வியாழக்கிழமைகளில் ரயில் இயக்கப்படாது.

முதல் வந்தே பிரத் ரயில் (20607/20608) கடந்த ஆண்டு நவம்பர் முதல் பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 12.20 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது. திரும்பும் ரயிலின் நேரம் - மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். முதல் வந்தே பாரத் ரயில் சென்னையில் தெற்கு ரயில்வேயால் பராமரிக்கப்படுகிறது.

இரண்டாவது ரயில் மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மாண்டியா, கேஎஸ்ஆர் பெங்களூரு, கேஆர் புரம் மற்றும் காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலை மதியம் 12.25 மணிக்கு சென்றடைகிறது. திரும்பும் ரயில் நேரங்கள் - ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு மைசூரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!