ஒரே நாளில் இரண்டு தேர்வு... மாணவி, மாணவிகள் அதிர்ச்சி..!

Published : May 16, 2019, 03:55 PM IST
ஒரே நாளில் இரண்டு தேர்வு... மாணவி, மாணவிகள் அதிர்ச்சி..!

சுருக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட். இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவி, மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.   

ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட். இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவி, மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 

2019-ம் ஆண்டுக்கான டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. ஆன்லைனில் 6 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு நடக்கும் தேதி திடீரென்று நேற்று அறிவிக்கப்பட்டது.

 

அதாவது ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல் தாளும், 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 தாளுக்கான தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் ஜூன் 8-ம் தேதியே பி.எட் இறுதியாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!