செம நியூஸ்: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிகம்..!

By karthikeyan VFirst Published Jul 10, 2020, 7:08 PM IST
Highlights

sதமிழ்நாட்டில் இன்று மேலும் 3680 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,281ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 3680 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,281ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று 37,309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3680 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,281ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவது நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1205 பேருக்கு மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 74,969ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4163 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324ஆக அதிகரித்துள்ளது. 46,105 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பை விட, அதிகமானோர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பது நற்செய்தியாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 4163 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 64 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1829ஆக அதிகரித்துள்ளது. 
 

click me!