பெட்ரோல், டீசல் விலையால் ஆறுதலில் வாகன ஓட்டிகள்..!

Published : Oct 19, 2019, 11:23 AM IST
பெட்ரோல், டீசல் விலையால் ஆறுதலில் வாகன ஓட்டிகள்..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயரத்தப்படவில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று  76.09 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 69.96 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக விலை அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. இடையில் விலை குறைந்தும் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்