மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி.. என்ன ஆச்சு.? அதிரடி திருப்பம்.!!

Published : Nov 15, 2023, 06:22 PM ISTUpdated : Nov 15, 2023, 08:33 PM IST
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி.. என்ன ஆச்சு.? அதிரடி திருப்பம்.!!

சுருக்கம்

புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட உள்ளார். இன்று மாலை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது ரெகுலர் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் பெயில் பெட்டிஷன் வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!