கொரோனா பாதிப்பில் முதல்முறையாக இரட்டை சதமடித்த சென்னை.. விழுப்புரத்தில் 33.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 3, 2020, 7:58 PM IST
Highlights

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று விழுப்புரத்தில் அதிகபட்சமாக 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து  கொண்டிருக்கிறது. பரிசோதனை எண்ணிக்கை ஏற்கனவே அதிகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் நேற்றும் இன்றைக்கும் அதிகபட்சமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. எனவே மூன்றாவது நாளாக இன்றைக்கும் 200க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. 

நேற்று 231 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் 203 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் 3023ஆகவும் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1458ஆகவும் அதிகரித்துள்ளது. 

இன்று சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 33 பேருக்கு கொரோனா உறுதியானது. எனவே அங்கு பாதிப்பு எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 32 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள். விழுப்புரத்தை தவிர மற்ற எந்த மாவட்டத்திலும் இன்று பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. 

கிருஷ்ணகிரி தொடர்ச்சியாக பாதிப்பே இல்லாத மாவட்டமாக பச்சை மண்டலமாக தொடர்கிறது. கொரோனாவிலிருந்து மீண்ட ஈரோடு, தூத்துக்குடி, நீலகிரி, சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக எந்த பாதிப்பும் இல்லை. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 28

செங்கல்பட்டு - 93

சென்னை - 1458

கோவை - 146

கடலூர் - 39

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 81

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 15

காஞ்சிபுரம் - 41

கன்னியாகுமரி - 17

கரூர் - 43

மதுரை - 90

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 11

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 20

ராணிப்பேட்டை - 40

சேலம் - 33

சிவகங்கை - 12

தென்காசி - 40

தஞ்சாவூர் - 57

தேனி - 44

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 70

திருவண்ணாமலை - 16

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 86

விருதுநகர் - 32.
 

click me!