விநாயக சதுர்த்தி 2023 : விநாயகருக்கு 'இப்படி' அர்ச்சனை செய்யுங்க...உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..!

Published : Sep 11, 2023, 11:56 AM ISTUpdated : Sep 11, 2023, 12:02 PM IST
விநாயக சதுர்த்தி 2023 : விநாயகருக்கு 'இப்படி' அர்ச்சனை செய்யுங்க...உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..!

சுருக்கம்

இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகை விநாயக சதுர்த்தி ஆகும். இது 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இந்நேரத்தில் விநாயகருக்கு சில பொருட்களை 10 நாட்கள் அர்ச்சனை செய்தால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

மத நம்பிக்கைகளின்படி, விநாயகர் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார். விநாயகர் மகிழ்ச்சியின் கடவுள். அவருடைய ஆசீர்வாதம் நம் மீது இருந்தால், நம் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதனால்தான் எல்லாக் கடவுள்களிலும் விநாயகர் முதல் வழிபாட்டைப் பெறுகிறார். அதனால்தான் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை 10 நாட்கள் கொண்டாடுகிறோம். 

இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களும் விநாயகப் பெருமானுக்குப் பத்துப் பொருட்களைச் சமர்ப்பணம் செய்வது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது ஜோதிடர்களின் கருத்து. இப்போது அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.. 

இதையும் படிங்க:  விநாயக சதுர்த்தி 2023 : விநாயகப் பெருமானை பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்..!!

நாள் 1: விநாயக் பெருமான் கொழுக்கட்டை மிகவும் விரும்புவார். எனவே விநாயக சவிதியின் முதல் நாளன்று விக்னேஷுக்கு கொழுக்கட்டைகளை வழங்குங்கள். இதன் மூலம் விநாயகரின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். 

நாள் 2 : விநாயகருக்கும் மோத்திசூர் லட்டுகள் பிடிக்கும். அதனால்தான் விநாயகர் திருவிழாவின் ஒரு பகுதியாக இரண்டாவது நாளில் மோத்திசூர் லட்டுகளை வழங்குங்கள்.

நாள் 3 : விநாயகருக்கு கடலை மாவு லட்டு மிகவும் பிடிக்கும். எனவே கணேஷ் பண்டிகையின் மூன்றாம் நாளில் இந்த லட்டுகளை வழங்குங்கள். 

நாள் 4 : விநாயகப் பெருமானுக்கு வாழைப்பழத்தை பிரசாதமாக சமர்பிப்பது ஐஸ்வர்யம் என்கின்றனர் ஜோதிடர்கள். எனவே இவற்றையும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். 
 
நாள் 5 : ஜோதிடர்களின் கூற்றுப்படி.. விநாயகருக்கு மக்கான (தாமரை விதை) கீர் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே ஐந்தாம் நாள் விநாயகருக்கு மக்கான கீரை வழங்குங்கள். 

நாள் 6 : இந்து மதத்தில் தேங்காய் புனிதமாக கருதப்படுகிறது. அதனால்தான் இது பூஜையின் போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு தேங்காயை கடவுளின் முன் அடித்து பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. அதனால ஆறாம் நாள் விநாயகருக்கு இவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். 

நாள் 7 : விநாயகருக்கு வெல்லமும் கொடுக்கலாம். ஏனெனில் அது புனிதமாக கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, விநாயகருக்கு வெல்லம் மிகவும் பிடிக்கும். எனவே ஏழாம் நாள் விநாயகருக்கு வெல்லம் மற்றும் நெய் சமர்பிக்கவும். 

நாள் 8 : விநாயகருக்கு மோதகத்துடன் மாவா லட்டுவும் பிடிக்கும். எனவே எட்டாவது நாளில் மோத்திசூர் மற்றும் கடலைமாவு லட்டுகளுடன் மாவா லட்டுகளை வழங்குங்கள். 

நாள் 9 : விநாயகருக்கு பால் மற்றும் நெய்யால் செய்யப்பட்ட இனிப்புகள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றை ஒன்பதாம் நாளில் வழங்குங்கள். 

நாள் 10 : 56 பிரசாதங்கள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. எனவே கடைசி நாளான பத்தாம் நாள் விநாயகப் பெருமானுக்கு 56 பிரசாதங்களைச் சமர்ப்பிக்கவும்.

இதையும் படிங்க:  வைரல் வீடியோ : விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள்.. தமிழ்நாட்டில் அதிசயம் !

PREV
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!