Vastu Tips : புது வீட்டை அதிஷ்டம் தரும் வீடாக மாற்ற இந்த விஷயங்களை முதல்ல பண்ணுங்க!!

By Kalai SelviFirst Published Apr 17, 2024, 10:19 AM IST
Highlights

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரத்தின் இந்த விதிகளை கடைபிடித்தால், உங்கள் புது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி அதிகரிக்கும்.

ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டை குறித்து கனவு காண்கிறார்கள். மேலும், ஒரு புதிய வீட்டில் உங்கள் எதிர்கால வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில், பெரும்பகுதி உங்கள் வீடு எவ்வளவு திறமையாக கட்டப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்ததே ஆகும். 

அதுபோல, ஒரு வீட்டைக் கட்டும்போது, உங்கள் வீட்டை எங்கு கட்டுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் கீழ், வீடு கட்டக் கூடாத சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி இருக்கும். இதற்கு வீடு கட்டும் போது சில வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். நீங்களும் வீடு கட்டப் போகிறீர்கள் என்றால்.. கண்டிப்பாக வாஸ்து தொடர்பான இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.

புது வீட்டிற்கான வாஸ்து குறிப்புகள்:

  • வாஸ்து படி, ஒரு குறுக்கு வழி, சந்திப்பு மற்றும் சதுரத்தில் கட்டப்பட்ட வீடு வாஸ்து குறைபாடு உடையது. மேலும், இத்தகைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகரிக்கும் மற்றும் வீட்டில் பிரச்சினைகள் நீடிக்கும்.
  • அதுபோல, வீட்டினுள் தேவையற்ற பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில், அதிகப்படியான பொருட்களை வைத்திருப்பது வீட்டிற்குள் எதிர்மறை சக்தியைக் கொண்டுவரும்.
  • வீடு கட்டும்போது பழைய மரம், செங்கற்கள், கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பது ஐதீகம். குறிப்பாக, இவற்றை உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் வைக்க வேண்டாம்.
  • வாஸ்து படி, வீட்டில் தெற்கு, மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் படிக்கட்டுகள் கட்டுவதற்கு சாதகமானது. வடகிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகள் இருந்தால், வீட்டில் நிதி இழப்பு, நோய் மற்றும் அனைத்து வகையான தடைகளையும் கொண்டு வரும். அதுபோல, வீட்டின் நடுப்பகுதி அதாவது பிரம்ம ஸ்தானத்தை எப்போதும் காலியாக இருக்க வேண்டும்.
  • வீட்டிற்குள் நுழைய ஒரே ஒரு கதவை மட்டும் வையுங்கள். அதற்கு மேல் வைத்தால் அது மங்களகரமானவை அல்ல. அதுபோல், வீட்டிற்குள் நுழைவதற்கு வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் தான் சிறந்தது. தெற்கு திசையில் தவறுதலாகக் கூட கதவைத் திறக்காதீர்கள். இது எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் கொண்டுவரும்.
  • வியாழ பகவான் வீட்டின் வடகிழக்கு திசையில் வசிப்பதால், இந்த திசையில் பூஜை அறையை வைக்கவும். மேலும் தெய்வங்களை கிழக்கு நோக்கி வையுங்கள்.
  • வாஸ்து படி, வீட்டின் சமையலறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். சமையலறையின் சுவர் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
  • அதுபோல, வடக்கு திசையில் குப்பைத் தொட்டி, வாஷிங் மெஷின், விளக்குமாறு மற்றும் மின்னணு சாதனங்களை வைக்க வேண்டாம். மீறினால்,  பண இழப்பு ஏற்படும்.
click me!