இந்த தெய்வத்தை வழிபட்டால் வழக்கு, கடன், நோய் - மூன்றும் காணாமல் போகும்.! பேரும் புகழும் கிடைக்கும்.!

Published : Aug 05, 2025, 06:05 AM IST
Varahi Amman

சுருக்கம்

வாழ்க்கையில் தொடரும் பிரச்சனைகளான கடன், வழக்குகள், எதிரிகளின் தொல்லைகளுக்கு தீர்வாக வாராஹி வழிபாடு உள்ளது. தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹியை வழிபடுவது பலன்களைத் தரும்.

எதிரிகள் காணாமல் போவர்

தீராத கடனும் வழக்குகளும் தீரும் வாராஹி வழிபாடு வாழ்க்கையில் சில பிரச்சனைகள் நீண்ட நாட்கள் தொடரும் போது, மனதிலும் குடும்பத்திலும் அமைதி கலைந்துவிடும். தீராத கடன் தொல்லைகள், நீதிமன்ற வழக்குகள், எதிரிகளின் சதி – இவை எல்லாம் ஒருவரை மெல்லமாக உடைத்து விடும். ஆனால், இதை அழிக்க ஒரு தெய்வீக சக்தி நம்மிடையே உள்ளாள். அவள்தான் வாராஹி அம்மன்.

செய்வினை,தோஷங்கள் நீங்கும்

வாராஹி என்பது வெறும் புராணக் கதையின் புனைவல்ல. அவள் உண்மையான சக்தியாகவே அறியப்படுகிறார். தேவி வாராஹி, விஷ்ணுவின் வாராஹ அவதாரத்திலிருந்து தோன்றிய சக்தி. இவள், துர்மார்க்க சக்திகளை அழிக்கவே உருவானவர். செய்நோய், செய்வினை, மாந்திரீக தோஷங்களை ஒழிக்கும் ஆற்றல் கொண்டவர்.

தேய்பிறை பஞ்சமி வழிபாடு

தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹியை வழிபடுவது மிகுந்த பலனை தரும். குறிப்பாக, தீராத கடன் தொல்லை, நீண்டநாள் வழக்கு சிக்கல், எதிரிகளின் தொல்லை ஆகியவை அகலும். மனதுக்கு தேவைப்படும் தைரியம், தன்னம்பிக்கை, சமாதானம் பிறக்கும்.

அருள் தரும் வழிபாடு

வாராஹி தேவிக்கு சிறப்பு பூஜை செய்ய, இரவு 8 மணி முதல் 10 மணி வரை வீட்டு பூஜை இடத்தில் தீபம் ஏற்றி வழிபடலாம். நைவேத்தியமாக வெள்ளை மொச்சை பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உளுந்த வடை, பானகம், எருமை தயிர், மாதுளை போன்றவை படைக்கலாம். கருப்பு, நீலம் நிற ஆடைகள் அணிந்து, கருந்துளசி அல்லது வில்வ பூஜை பொருளாக பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் ஒருவகையான பலன்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் வாராஹியை வழிபட்டால் விதவிதமான பலன்கள் கிடைக்கும். ஞாயிறன்று உடல் நலம், திங்கட்கிழமை மன அமைதி, செவ்வாயன்று வீட்டு நிலம் பிரச்சனை தீர்வுகள், புதன்கிழமை கடன்கள் தீரும், வியாழனன்று கல்வி மற்றும் குழந்தை பேறு, வெள்ளிக்கிழமை காரிய வெற்றி ஆகியன நிச்சயமாக அமையும்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் தாய்

மனதில் உள்ள கோரிக்கைகளை வாராஹிக்கு சொன்னாலே போதும். பக்தர்களின் பிளவேறு கூப்பிடும் குரலைக்கூட கேட்டுவிடும் பாசமிகு தாய் இவள். யாராலும் தீர்க்க முடியாத சிக்கல்கள், வழக்குகள் கூட வாராஹி வழிபாட்டால் விலகும். உலகில் அழிவு ஏற்படும்போது அதைக் காப்பதற்காக அவதரித்தவள் வாராஹி; அப்படி இருக்க, உங்களின் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையா? தேய்பிறை பஞ்சமி நாளை விட்டு விடாதீர்கள். வாராஹி அம்மனின் அருளால், உங்கள் வாழ்க்கை ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். கடன் காணாமல் போய்விடும், மனம் நிம்மதியாகும். வாராஹியின் அருள் என்பது நிச்சயம் பெரும் சக்தி என்று முன்னோர்களும் ஆன்மிக வாதிகளும் சொல்லியுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!