வன போஜனம் என்றால் என்ன? கோயில்களில் ஏன் காடுகளுக்குச் சென்று உணவருந்தும் உற்சவம் நடக்கிறது?

Published : Jan 19, 2026, 06:08 PM IST
Significance of Vana Bhojana Utsavam and Celebration in Tamil

சுருக்கம்

Vana Bhojana Utsavam : வன போஜனம் என்பது கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய வழிபாடு. இறைவன் காடுகளுக்கு எழுந்தருளி பக்தர்களுடன் உணவருந்தும் இந்த உற்சவத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வனபோஜன உற்சவம்:

வன போஜன உற்சவம் என்பது, கோயில்களின் உற்சவ மூர்த்திகளை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கு சிறப்புப் பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கும் ஒரு விழா.இது பெரும்பாலும் கார்த்திகை மாதத்தில் திருப்பதி போன்ற கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

எப்படி கொண்டாடப்படுகிறது?

கார்த்திகை மாதத்தில் அல்லது குறிப்பிட்ட நாட்களில் உற்சவர் மூர்த்திகள் கோயிலில் இருந்து ஊர்வலமாக வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவர். அங்கு பார்வேடு மண்டபம் போன்ற இடங்களில் சிறப்பு திருமஞ்சனங்கள் ஆன மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வன போஜனம் வழங்கப்படும்.இந்த நாட்களில் கல்யாண உற்சவம் போன்ற பிற முக்கிய சேவைகள் ரத்து செய்யப்படலாம். சுருக்கமாக, வன போஜன உற்சவம் என்பது இயற்கையைப் போற்றும் ஒரு விழாவும், இறைவனை வனத்தில் வழிபடும் ஒரு கோயில் சடங்கும் ஆகும்.

ஏன் கொண்டாடப்படுகிறது: 

கிருஷ்ணர் காட்டில் உணவு உண்டதையும், இயற்கை வளங்களைப் போற்றியதையும் நினைவு கூறும் வகையில் வனபோஜனம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் வனப்பகுதியைச் சென்று வனபோஜன செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த நாளில், வனப்பகுதியில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்குவதன் மூலம், பக்தர்கள் இறைவனோடு இயற்கையையும் வழிபடுகிறார்கள். சுருக்கமாக, வன போஜன உற்சவம் என்பது ஆன்மிகத்தையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் இணைக்கும் ஒரு பாரம்பரிய விழாவாகும்.மரம் நடுதல், காடு வளர்ப்பதை ஊக்குவித்தல், மாற்று எரிபொருட்களை வழங்குதல், உணவு உற்பத்திக்கு உதவுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இது ஒரு கலாச்சார விழாவாகக் கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் இந்த வனபோஜனம் பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்:

இந்த வன போஜன உற்சவம் வரும் 20ஆம் தேதி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வன போஜன உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக முதலில் அபிஷேகம் நடைபெற்று பின்னர் சுவாமியின் புறப்பாடு நடைபெற்று வன போஜன உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இங்கே நந்தி இல்லை, பிரதோஷமும் இல்லை! புதுக்கோட்டை ஆவுடையார்கோயில் - சிவபெருமான் அருளும் விசித்திர கோலம்!
ஒரே இடத்தில் 8 பைரவர்கள்! சட்டைநாதர் கோயிலின் ரகசிய வழிபாடும் அற்புதப் பலன்களும்!