குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் நிம்மதி உண்டாக வழிபட வேண்டிய கோயில்!

Published : Jan 29, 2026, 10:43 PM IST
Patteeswaram Temple For Pregnancy blessings family happiness in Tamil

சுருக்கம்

Patteeswaram Temple For Pregnancy Blessings : குழந்தை பாக்கியம் கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் வழிபட வேண்டிய கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துர்க்கை அம்மனின் ராஜ்ஜியம்:

Patteeswaram Temple For Pregnancy Blessings : கும்பகோணம் அருகே அமைந்துள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் மகிஷாசுரன் தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகள் மற்றும் நான்கு கண்களையும் கொண்டு காட்சி தருகிறாள். அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை மற்றொரு கையில் கேடயம் கொண்டு காட்சி தருபவள் எப்போதுமே ஒன்பது கஜப் புடவையுடனே காட்சி அளிக்கின்றாள்.

கோயிலின் அமைப்பு:

ஐந்து நிலை கோபுரங்களை கொண்டது. ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர்கள் மற்றும் நாயக மன்னர்களால் கட்டப்பட்டதாகும். சோழ மன்னரை இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக கூறப்படுகிறது. சோழ மன்னருக்கு குலதெய்வம் ஆக இருந்தது துர்க்கை அம்மன் தான் என்றும் தன் அரண்மனைக்கு பாதுகாப்பாகவும் துர்க்கைஅம்மன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. துர்க்கை அம்மனின் சன்னதிக்குப் பின்புறமாக ஞானவாபி குளம் உள்ளது. அதன் கரைகளில் நாக தோஷத்தை நீக்கிக் கொள்ள நாகர்கள் அதாவது நாகங்களின் சிலைகள்அமர்ந்து உள்ளன. அதன் எதிரில்தான் கொடிமர விநாயகரும் சன்னதியில் அமர்ந்து உள்ளார். அதன் பின்புறத்தில் உள்ள நுழை வாயில் வழியே சென்றால் ஞானாம்பிகை மற்றும் பட்டீஸ்வரர் தனி சன்னதிகள் உள்ளன.மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது.

பலன்கள்:

ராகு தோசத்திலிருந்து விடுபட துர்க்கை அம்மனை தரிசித்தால் அதுவும் ராகு காலத்தில் வந்து தரிசித்தால் விரைவில் ராகு தோசத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு இங்கு வந்து திருக்கைமணி தரிசித்துச் சென்றால் விரைவில் விலகும் என்றும் சொல்லப்படுகிறது இங்கு ராகு , செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமும் செய்யப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. திருமணத்தடை இருப்பவர்களுக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையை மன நிம்மதி தீராத நோய்களும் ஒரு எலுமிச்சை மாலை மூலம் இங்கு தீர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ராகு தோஷத்திலிருந்து விடுபட செய்ய வெண்டிய பரிகாரம்; பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்!
இறைவனை எப்படி வழிபட வேண்டும்? முன்னோர்கள் கூறிய 9 பக்தி நெறிகள்!