பங்குனி உத்திரம் 2024 : முருகனுக்கு இப்படி விரதம் இருங்க.. கோடி நன்மைகள் கொட்டும்!

Published : Mar 20, 2024, 10:46 AM ISTUpdated : Mar 20, 2024, 10:57 AM IST
பங்குனி உத்திரம் 2024 : முருகனுக்கு இப்படி விரதம் இருங்க.. கோடி நன்மைகள் கொட்டும்!

சுருக்கம்

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 ஆம் தேதி அன்று வருகிறது. எனவே அந்நாளின் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் கடைசி மாதம் பங்குனி. இந்நாளில் தான் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் ஒன்றாக வருகிறது.  பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக முருகன் கோவில்களில் நடக்கும் விழாக்கள் இந்த நாளின் முக்கிய சிறப்பம்சமாகும்.

பங்குனி உத்திரம் முக்கியத்துவம்:
மிகவும் சுவாரஸ்யமாக பல தெய்வீக திருமணங்கள் இந்த பங்குனி உத்திரம் நாளில் நடந்ததாக கூறப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதி, முருகன் மற்றும் தேவயானி, ஆண்டாள் மற்றும் ரங்கநாதர், ராமர் மற்றும் சீதையின் திருமணங்கள் இந்த புனித நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, ஐயப்பனின் அவதாரம் மற்றும் மகாலட்சுமி தேவியின் அவதாரம் உட்பட மற்ற முக்கியமான நிகழ்வுகளும் இன்றுவரை கூறப்படுகின்றன. இதனால் தான் இந்நாளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: பங்குனி 2024 : பங்குனி மாத சிறப்புகள், முக்கிய விரத நாட்கள், விசேஷங்கள்.. முழு விவரம் இதோ..

முருகன் கோவில்களில் நடக்கும் நிகழ்வுகள்:
பங்குனி உத்திரத்தன்று தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடு என்று அழைக்கப்படும் ஆறு பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மேலும் இந்த கோவில்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக, முருகப்பெருமானின் மீது கொண்ட பக்தியின் அடையாளமாக பக்தர்கள் பல மைல்களுக்கு மேல் நடந்தே செல்வார்கள். அவர்களில் பலர் பால் பானைகளையும், காவடிகளையும் தங்கள் தோள்களிலும் தலையிலும் சுமந்துகொண்டு கோயிலில் காணிக்கையாக சில பொருட்களை சுமந்து செல்வார்கள். முக்கியமாக, பழனி மலையில், முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேர் திருவிழா இந்த நாளில் மிக முக்கியமான திருவிழாவாகும்.

இதையும் படிங்க: Panguni Uthiram 2024 : பங்குனி உத்திரம் எப்போது..? அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா..??

பங்குனி உத்திரம் விரதமுறைகள்:

  • இந்த நாளில் விரதம் இருப்பது குறிப்பாக முருக பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அனுசரிப்பு. இந்த நாளில் காலையில், பக்தர்கள் புனித நீராடி விரத நடைமுறையைத் தொடங்குகின்றனர். 
  • காலை பூஜைக்குப் பிறகு, பக்தர்கள் ஒரு நாள் கடுமையான விரதம் அனுசரிப்பார்கள். அது முடியாவிட்டால், அவர்கள் விருப்பப்படி தண்ணீர் அல்லது பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். 
  • மேலும், அந்நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படித்தால் நல்லது. ஒருவேளை அப்படி படிக்க முடியாதவர்கள் 'ஓம் சரவண பவ' என்னும் மந்திரத்தை அந்நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும்.
  • நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன், சிவன், விஷ்ணு கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நிறைவடையும்.
  • இந்த விரதத்தின் பலனாக, பக்தர்களுக்கு செல்வம், வளர்ச்சிக்கு தடைகள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சியை பெறுவார்கள்.
  • 48 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை கிடைத்து முக்தி நிலை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
  • அதன்படி இந்த 2024 ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அன்று வருகிறது. எனவே அந்நாளில் சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Spiritual: ஜனகரின் மாப்பிள்ளை ஸ்ரீராமன் கிடையாதாம்.! அப்போ உண்மையான மாப்பிள்ளை யார் தெரியுமா?!
Dhanusu Rasi Palan Dec 04: தனுசு ராசி நேயர்களே, இன்று சவால்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.!