Today Rasipalan 29th May 2023: பயணத்தை தவிர்க்க வேண்டியது யார்..? கார் வாங்கணும்னா உடனே வாங்குங்க

Published : May 29, 2023, 05:30 AM IST
Today Rasipalan 29th May 2023: பயணத்தை தவிர்க்க வேண்டியது யார்..? கார் வாங்கணும்னா உடனே வாங்குங்க

சுருக்கம்

மே 29ம் தேதிக்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்ப்போம். 

மேஷம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள் என்பதால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள்.

ரிஷபம்:

நெருங்கிய உறவினரிடமிருந்து வரும் நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடு செய்ய ஏற்ற சமயம் இது. ஈகோவை தவிர்க்கவும். 

மிதுனம்:

தந்தையின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை ஏற்று செயல்படவும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு அகலும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து கடுமையாக உழைக்கவும்.

கடகம்:

அக்கம்பக்கத்தினருடன் சண்டை போடவேண்டாம். தொழில் ரீதியான பயணங்களை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர புரிதலால் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

சிம்மம்:

உங்கள் தனிப்பட்ட வேலையை முடிக்க நிறைய நேரம் செலவிடுவீர்கள். சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் தொடர்பான வேலை வெற்றிகரமாக முடியும். தொழிலில் சீரியஸாக இருக்கவும். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்:

எந்த வேலையிலும் வெற்றி கிடைக்க கடினமாக உழைத்தாக வேண்டும். கார் வாங்குவதென்றால் உடனே வாங்கவும். தேவையில்லாத செலவுகளை குறைக்கவும்.

விருச்சிகம்:

எந்த பிரச்னையும் பேச்சுவார்த்தையின் மூலம் சரியாகும். குழந்தைகளிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். பட்ஜெட்டை கருத்தில்கொண்டு செலவு செய்யவும்.

தனுசு:

இன்று கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஈகோ மற்றும் கோபத்தை தவிர்க்கவும். குடும்ப பிரச்னையில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்காதீர்கள்.

மகரம்:

உங்கள் திறமைக்கேற்ப வேலை பார்த்தால் வெற்றி கிடைக்கும். சரியான புரிதலுடன் முடிவுகளை எடுக்கவும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.

கும்பம்:

இன்று நற்செய்தி எங்கிருந்தாவது கிடைக்கும். நிதானமாகவும் அமைதியாகவும் முடிவெடுக்கவும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.

மீனம்:

தேங்கிக்கிடந்த வேலை இன்று திடீரென நடந்து முடியும். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். சகோதரர்களுடன் நல்லுறவை பேணவும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பொன், பொருளை அருளும் வராஹி அம்மன் வழிபாடு.! இனி வம்புதும்பு, வழக்குகளும் உங்களை சீண்டாது.!
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!