Homam Items And Its Benefits : பொதுவாக பூஜையின் போது மந்திரம் உச்சரித்து ஹோமகுண்டத்தில் பலவித குச்சிகளை அக்னியில் போடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த குச்சிகளை தான் சமித்து என்பர். ஒவ்வொரு சமித்து குச்சியும், வெவ்வேறு வேண்டுதல்கள் மற்றும் பலன்களை கொண்டுள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தி யாகம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பார்ப்பதற்கு அந்த குச்சிகள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு.
இதையும் படிங்க: வீட்டில் ஹோமம் எதற்கு ? வருடத்தில் ஒரே ஒரு முறை...மறக்காதீங்க..!
சமித்து குச்சிகளும், அதன் பலன்களும்:
- வில்வம் - வில்வ குச்சியைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெற்றுக்கொள்ளலாம். சிவசக்தி தொடர்பான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் குச்சிகளை பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும்.
- துளசி - துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கி, விரைவில் திருணம் கைகூடும் மற்றும் நினைத்த காரியம் கைகூடும்.
- சோமவல்லிக் கொடி - கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் எல்லாவிதமான நோய்களும் நீங்கி, பிரம்மதேஜஸ் பெறுவீர்கள். மேலும் கொடியை கணுக்கள் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட்டால், காச நோய் விலகும்.
- பலாசு சமித்து - இது சந்திர கிரக சமித்து என்பதால், சந்திரகிரக பிரீதியாகும். மேலும் பலாசு புஷ்பத்தால் எல்லா நினைத்த காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் கிடைக்கும். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்தால், ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானமடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடைய முடியும்.
- அரசு சமித்து - அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தம் என்பதால், தலைமைப் பதவி பெறலாம். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மையும் கிடைக்கும்.
- வெள்ளை எருக்கு - இது சூரிய கிரகத்தின் சமித்தம். மேலும் இதுவொரு சர்வசக்தி உடையது. இதனால் வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். மேலும் இந்த சமித்துக்களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். இதுதவிர எடுத்த வேலையும் இனிதே முடியும்.
- செம்மர சமித்து - இது அங்காரக கிரக சமித்து என்பதால், ரண ரோகங்கள் நீங்கும் மற்றும் தைரியம் பெருகும்.
- நாயுருவி சமித்து - இது புது கிரக சமித்து ஆகும். இதனால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்ததாகும்.
- அத்தி சமித்து - இது சுக்கிர கிரகத்தின் சமித்து. இதனால் பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு ஆகியவற்றின் அச்சங்களை துரத்தும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தி ஏற்படும்.
- வன்னி சமித்து - இது சனிக் கிரகத்தின் சமித்தாகும். இந்த சமித்துவில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும், மூவுலகினையும், மூன்று அக்னிகளையும், முக்குணங்களையும் குறிப்பதாக உள்ளது. இதனால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும்.
- தர்ப்பை சமித்து - கேது பகவானுக்கு மிகவும் பிடித்த இந்த சமித்து ஞான விருத்தியைத் தரும்.
- அருகம்புல் - ராகு பகவானுக்குப் பிடித்த இந்த சமித்து, பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியங்களை கைக்கூட செய்யும். கீர்த்தியும், புகழும் கிடைக்கும். இதுதவிர அறிவும், அழகு மற்றும் வசீகரம் உண்டாகும். கணபதி ஹோமத்திலும் இதைப் பயன்படுத்துவார்கள்.
- கரும்பு - கரும்புத் துண்டுகள் அல்லது கருப்பஞ்சாறையாவது வைத்து ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைக்கும். கணபதி ஹோமத்திலும் இதை பயன்படுத்துவார்கள்.
- ஆலசமித்து - இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்தாலும். இது யமனுக்கு மிகவும் பிடித்த சமித்தாகும். இந்த சமித்தால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
- எள் - ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்தால்,பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் மற்றும் தீராத கடன் தொல்லையும் தீரும்.
- புங்க மரம் - இந்த சமித்து வெற்றியைத் தரும்.
- இலந்தை - இந்த சமித்தினால் ஹோமம் செய்தால், குடும்பம் இனிது வாழ வழி கிடைக்கும்.
- தேவதாரு - இந்த சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால், சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் அளிப்பார்கள்.
- வல்லாரைக் கொடி - இதை கொண்டு ஹோமம் செய்தால், கல்வி சிறப்பாகும்.ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் சரஸ்வதி கடாட்சமும் உண்டாகும்.
- சந்தன மரம் - இந்த சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி உள்ளிட்ட சகல பீடைகளையும் விலக்கி, லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
- வேங்கை மரம் - இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி, சூனியம், ஏவல், பிசாசு, பயம் போன்ற யாவும்
- ஓழியும்.
- மகிழம்பூ - இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நீங்கும். சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி அடையும்.
- பூவரசு - இந்த சமித்து பூலோக அரச மரம் என்று அழைக்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித்து வைத்து ஹோமம் செய்து அதன் பலனை பெறலாம்.
- நவதானியங்கள் - அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தைதானியத்தைக் கொண்டு ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகி ஓடும். சுபிட்சம் நிலவும்.
- மஞ்சள் - முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்ததாகும். எனவே, இதை வைத்து ஹோமம் செய்தால் சகல வியாதிகளை நீக்கும். இதுதவிர கல்வியும், செல்வமும் கிடைக்கும்.
- தாமரை புஷ்பம் - லட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் மிகவும் பிடித்தமானது.
- மாதுளை மரம் - அழகான வடிவமும், வசீகரமும் கிடைக்க இதை வைத்து ஹோமம் செய்யலாம்.
இதையும் படிங்க: 3 முறை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை இப்படி செய்து பாருங்கள்!தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு ஓடி விடும்,