நம் பக்கத்திலே இருந்து நமக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எதிரிகளை அழிக்க இந்த செடியை வீட்டு வாசல்ல வளர்த்தா போதும்

By Asianet TamilFirst Published Apr 30, 2023, 12:00 PM IST
Highlights

ஒவ்வொருத்தருடைய வீட்டு வாசலிலும் ஏதாவது ஒரு செடி வளர்த்து வருவதை பார்த்து இருப்போம். அப்படிப்பட்ட செடிகளில் முக்கித்துவம் கொடுக்க கூடிய, முதல் செடியாக இந்த செடியை தான் வளர்க்கணுமாம்
 

இந்த ஒரு செடியை வீட்ல வளர்க்கிற மூலமா எதிரிகள் தொல்லை அப்படிங்கிறது இருக்காது. கண் திருஷ்டியை போக்கும், கஷ்டம் நீங்கும், செல்வம் பெருகும்.காரிய சித்தி கிடைக்கும். ஒவ்வொருத்தருடைய வீட்டு வாசலிலும் ஏதாவது ஒரு செடி வளர்த்து வருவதை பார்த்து இருப்போம்.அப்படிப்பட்ட செடிகளில் முக்கியத்துவம் கொடுக்க கூடிய, முதல் செடியாக இந்த செடியை தான் வளர்க்கணுமாம்.

நம் பக்கத்திலேயே இருந்து கொண்டு நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் சிலர் நம் அனைவரது வாழ்க்கையிலும் இருக்க தான் செய்வார்கள். இந்த நபர்கள் நமக்கு நண்பர்கள் போன்று பழகினாலும் ஏதோ 1 வகையில் வன்மம், பொறாமை,வயிற்றெரிச்சல் போன்ற எதிர் மறை எண்ணங்கள் கொண்டு தான் நம்முடன் பழகுவார்கள்.

இவர்களால் நாம் செய்யும் செயல்களில் தடைகள், வெற்றி பெற முடியமால், முன்னுக்கு வர முடியாமல்,ஒற்றுமையாக உள்ள குடும்பத்தில் சில பிரச்சனைகள் என்று பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். இதனை எல்லாம் சரி செய்ய இந்த செடியை உங்க வீட்டு வாசலில் வளர்த்துடுங்க . 

சிவப்பு நிற செம்பருத்தி செடியை வீட்டு வாசலில் வளர்ப்பது மிகவும் சிறப்பான பலனை தரும். சிவப்பு நிறத்திற்கு ஒரு அபூர்வமான மற்றும் அபாரமான ஒரு சக்தி இருக்கிறது. அதாவது எதிரிகளை கிட்ட நெருங்க விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி சிவப்பு நிறத்திற்கு உண்டு.

ஒரு சிலர் வீடுகளில் பார்த்தேங்கன்னா வாசல் முழவதும் செம்பருத்தி செடியை மட்டுமே வளர்த்து வருவார்கள். அதுக்கு முக்கிய காரணம் இதுவாக தான் இருக்கு, ஒருவருடைய வீட்டில் எதிரிகள் மூலம் பிரச்சனை கண்ணனுக்கு தெரியாத ஏதோ ஒன்றினால் பிரச்சனைகள் தோன்றும், யாராவது வீட்டிற்கு வந்தால் திருஷ்டி ஏற்பட்டு அதன் மூலமாக வீட்டில் சிறிய பிரச்சினையாக தோன்றி பின் அதுவே பெரிய பிரச்சனையாக மாறும்.

சிலரது வீடுகளில் வீண் விரய செலவு ஆகும் .அப்படி எண்ணுபவர்கள் கூட இந்த சிவப்பு நிற செம்பருத்தி செடியை வீட்டு வாசலில் வளர்த்து வந்தா போதும்.

ஏன் செம்பருத்தி செடியை வீட்டு வாசலின் முன் வளர்க்க வேண்டும்:

வீட்டிற்கு வரும் நபர்கள்,முதலில் செம்பருத்தி செடியை வாசலில் பார்ப்பதால் அவர்கள் ஏதாவது துர் சத்தி/ தீய எண்ணம் போன்றவற்றை எடுத்து வந்தாலும் அவைகளை அங்கேயே தடுத்து நிறுத்தி விடும் மகத்துவம் பெற்றது.

இந்த பூக்கள் பூத்து, பின் வாடும் போது நம் வீட்டில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள், தீய சக்திகள், திருஷ்டி, போட்டி, பொறாமை, எதிரி தொல்லை போன்ற அனைத்தும் நம்மை வாட்டி வதைக்காமல் வாடி,சுருண்டு போய் விடும்.

அதனால் தான் வசதி படைத்தவரக்ளின் வீடுகளில் சிவப்பு நிற செடியை அதிகமாக வளர்த்து வருகிறார்கள். 1 செடி கூட போதும். அதில் பூக்கும் பூக்களில் 2 பூக்கள செடியில் விட்டு விட்டு மற்ற அனைத்து பூக்களையும் பறித்து தெய்வங்களுக்கு சாற்றி வழிபட்டு வந்தாலே போதும்.

செடியை வளர்க்க இடம் இல்லாதவர்கள், வீட்டு வாசலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றின் அதன் மேல் சிவப்பு நிற பூ ஒன்றை வைத்து விட வேண்டும். இதனை தினமும் காலையில் மாற்றி விட வேண்டும். அதாவது தினமும் ஒரு கிண்ணத்தில் உள்ள தண்ணீரையும் செம்பருத்தி பூவையம் மாற்றி விட வேண்டும்

இவ்வாறு செய்வதால் கூட செம்பருத்தி செடி வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதே பலன்களை தரும். ஆகவே ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதனை முறையாக பின்பற்றி உங்கள் வாழ்வில் எதிரிகளின் தொல்லைகள் இன்றி வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தரித்திரமும் ,வீண் செலவும் துரத்துதா? 4 காச சேக்க முடியலயா?அப்ப இந்த விளக்குல தீபம் ஏத்துங்க!எல்லாமே மாறிடும்
 

click me!