சனி பகவான் அருள் பெறுவதற்கு இதைச் செய்யுங்கள் போதும்..!!

By Dinesh TGFirst Published Nov 12, 2022, 11:18 PM IST
Highlights

தமிழ்ச் சமுதாயத்தில் கருப்பு எள்ளுக்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை இருக்கும் ஒரே தானியமாக கருப்பு எள்ளு விளங்கி வருகிறது.
 

தமிழ் பண்பாட்டு நெறிக்கான முக்கிய அடையாளம் தான் கருப்பு எள்ளு. தமிழ் பண்புநலன்களை ஒட்டி வாழும் பல்வேறு கலாச்சாரங்களிலும் கருப்பு எள்ளுக்கு என்று முக்கியத்துவம் உள்ளது. வெறும் மய நிகழ்வுகள் தவிர, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இணைந்திருக்கும் தானியமாக கருப்பு எள் விளங்குகிறது. குழந்தை பிறக்கும் போது நல்லெண்ணெய் தேய்த்து தான் குளிப்பாட்டுவோம். 

பல்வேறு நல்ல காரியங்களிலும் கருப்பு எள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல துக்க காரியங்களிலும் இந்த தானியத்துக்கு தனித்துவம் உள்ளது. இறந்துபோன பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது, அமாவாசை நாளில் முன்னோர்கள் நினைவாக எள் சாதத்தை ஆற்றில் கரைப்பது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்படும். எள்ளின் இந்த வழிமுறைகளை ஏற்றுக்கொண்டால், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி குடியேறும்

ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பு, அதில் கருப்பு எள்ளை தினமும் போட்டு வரவேண்டும். அந்த நீரை வலிங்கத்தின் மீது 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஊற்றவேண்டும். இதன்மூலம் அசுப அம்சம் பெற்றவர்கள் விரைவாக பணப் பிரச்னையில் இருந்து விடுபடுவார்கள் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது கால சர்ப்ப யோக ராகு, கேது மற்றும் சனி தோஷத்தின் தீங்கான பலன்களை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கருப்பு துணியில் கட்டி கருப்பு எள் மற்றும் கறி எள் உருண்டைகளை ஏழைகளுக்கு சனிக்கிழமை தானமாக வழங்கவும். குறைந்தபட்சம் 11-21 சனிக்கிழமைகளில் இதைச் செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் நீண்ட நாட்கள் தீரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சனிக்கிழமையன்று எறும்புகளுக்கு கருப்பு எள், மாவு மற்றும் சர்க்கரையை படைப்பதன் மூலம், சனிதோஷம் நீங்கி ஒட்டுமொத்தமாக சனிபகவானின் அருள் கிடைக்கும்

உங்களுடைய வேலையில் ஏதேனும் தடைகள் இருந்து வெற்றி கிடைக்காமல் போனால், ஜோதிட சாஸ்திரப்படி அதற்கும் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதற்கு ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து, வழியில் எங்காவது ஓடும் நீரில் எறியுங்கள். இதன்மூலம் வேலை சம்மந்தமான தடைகள் நீங்கும். சனிபகவானின் அருளால் இல்லறத் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு மனிதனும் அடக்கி கையாள வேண்டிய 4 உணர்ச்சி நிலைகள்- விதுரர் நீதி..!!

ஒருவேளை உங்களுக்கு சனி பகவான் மூலம் கெடுதல் தொடர்ந்து நடப்பதாக இருந்தால், ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் கறி எள்ளுடன் பாலுடன் கலந்து அஸ்வத் மரத்தின் வேரில் அர்ச்சனை செய்து சனிபகவான் அருள் பெறலாம். இந்த பரிகாரம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது மற்றும் குடும்ப உறவுகள் நிம்மதியாக இருக்க வழிவகை செய்கிறது.
 

click me!