700 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு

By Velmurugan sFirst Published Apr 26, 2023, 1:26 PM IST
Highlights

மயிலாடுதுறை மாவட்டத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்ததலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தக்ஷனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன்,சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று மயில் வாகனமாக இருக்கின்ற ஸ்தலமாக இது விளங்கி வருகிறது.

இங்கு தக்ஷிணாமூர்த்தி தக்ஷண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இந்தகோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி நடந்து விழாவின் முக்கிய நாளான இன்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து. தொடர்ந்து பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தி வைத்தனர்.

பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

click me!