அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி; முதல்வர் எடப்பாடி பேச்சு

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி; முதல்வர் எடப்பாடி பேச்சு

சுருக்கம்

Yoga training in all schools Chief Minister speech

சென்னை பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்கள் பணி ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

கடந்த 6 வருடங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான முழு நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் மனதில் அமைதியைக் கொடுப்பது கல்விதான். அந்த அமைதியும் அறிவையும் வழங்கும் கல்வியை வழங்குபவர்கள் ஆசிரியர்கள்தான். 

நல்ல குடிமக்களை உருவாக்குவதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் பங்களிப்பு மகத்தானது.
மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் கலைத் திருவிழா நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பிரசார மேடையில் மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய்.. ரசிகர்களை அதிர வைத்த 'அந்த' ட்விஸ்ட்!
தமிழக அரசியலில் கட்சி தொடங்கி காணாமல் போன நடிகர்கள் பட்டியல்.! எதிர்பார்ப்புடன் வந்து ஜொலிக்க முடியாமல் போன முக்கிய தலைகள்.!