பொண்டாட்டி ஊருக்கு போன கேப்புல புருஷன் ரெண்டாவது கல்யாணம்.. கதறி அழுத மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 6:57 PM IST
Highlights

பின்னர் கணவர் தன்னை சேர்ந்து வாழ அழைத்ததுடன், இன்னும் ஒரு ஆறு மாத காலம் தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும், அதுவரை தன்னை தாய் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்,

தன்னை அடித்து தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தன் கணவன் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். திட்டமிட்டு மாமியாரும் கணவரும்  தனக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளதாகவும், தன்னிடம் இருந்து  முறையாக விவாகரத்து பெறாமலேயே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த கணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வரதட்சணை கேட்டு குடும்ப வன்முறை, ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு, சிறுமி பாலியல் பலாத்காரம், என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தனது புகார் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும், நங்கநல்லூரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது, திருமணமான சில நாட்களிலேயே கணவர் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தொடர்ந்து தன்னை தாய் வீட்டிற்கு சென்று நகை பணம் வாங்கி வருமாறு லாரன்ஸ் துன்புறுத்தி  வந்ததாகவும் கூறினார். தினம் குடித்து விட்டு கஞ்சா, மது போதைக்கு அடிமையான தனது கணவர் தன்னை வேலைக்கு செல்லும் படி கூறியதாகவும், தானும் வேலைக்குச் சென்று அவருக்கு இருசக்கர வாகனம் மற்றும் வங்கி கடன் பெற்று கொடுத்ததாகவும், அதைப் பெற்றுக்கொண்டு சிறிதுகாலம் அமைதியாக இருந்த கணவர் லாரன்ஸ் மீண்டும் மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் தன் அம்மா வீட்டிற்கு தான் சென்றதாகவும் பிரியதர்ஷினி கூறினார். 

பின்னர் கணவர் தன்னை சேர்ந்து வாழ அழைத்ததுடன், இன்னும் ஒரு ஆறு மாத காலம் தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும், அதுவரை தன்னை தாய் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார், அதன்படி கடந்த ஆறு மாத காலம்  தனது தாய் வீட்டிலேயே தான் இருந்ததாக பிரியதர்ஷினி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரியதர்ஷினி, கணவருக்கு வாங்கிகொடுத்த வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து, பேசுவதற்காக கணவரையும் மாமியாரையும் சந்திக்க சென்றதாகவும், திவ்யா என்ற பெண்ணுடன் வந்த கணவர் லாரன்ஸ் மற்றும் மாமியார் ஜெயசீலி ஆகியோர் தன்னுடன் தகராறில்  ஈடுபட்டதாகவும் அப்போது திவ்யா என்ற பெண்ணை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கணவர் லாரன்ஸ் தன்னிடம் கூறியதாகவும் பிரியதர்ஷினி கூறினார்.

உடனே அதிர்ச்சி அடைந்த தான்,  தன்னை அம்மா வீட்டில் இருக்க வைத்துவிட்டு 2 இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக கூறினார். முதல் மனைவி தான் இருக்கும்போதே,  தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய கணவர் ,மற்றும் மாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
 

click me!