நான் விலகி நிற்கிறேன்... நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்... அமித்ஷா மீது கடுப்பாகி மம்தா ஆத்திரம்..!

By Thiraviaraj RMFirst Published May 28, 2020, 11:03 AM IST
Highlights

மேற்கு வங்க அரசாங்கத்தால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். 
 

மேற்கு வங்க அரசாங்கத்தால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். 

கொரோனா விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கலை சந்தித்த மம்தா பானர்ஜி, ’’நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும், விமானங்களும் ஓடுகின்றன. இதனால்தான் கொரோனா அதிகமாக் பரவுகிறது. நான் அமித் ஷாவிடம் சொன்னேன், நீங்கள் தொடர்ந்து மத்திய குழுக்களை மேற்கு வங்காளத்திற்கு அனுப்புகிறீர்கள். மேற்கு வங்க அரசாங்கத்தால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நான் பொதுவாக இதையெல்லாம் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நான் அமித் ஷாவிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும் விமானங்களும் ஓடுகின்றன. நான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு சொல்ல விரும்புகிறேன். தயவுசெய்து கொரோனா பரவுவதை பாருங்கள். எங்களுக்கு ஏற்கனவே 1 லட்சம் பாதிப்புகள் உள்ளன. சில பகுதிகள் அரசியலுக்காக பரவ வேண்டும் என்று விரும்புகின்றன. பீகார், ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய முடியும்? இந்த பேரழிவு சூழ்நிலையில், பிரதமர் தலையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவர்கள் என்னை அரசியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்காளத்தை தொந்தரவு செய்கிறார்கள். அரசியல் ரீதியாக என்னை தொந்தரவு செய்யுங்கள், ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களைப் பற்றி சில திட்டங்களைச் முடிவு செய்யுங்கள். இது என்ன முட்டாள்தனம்? நாங்கள் ஒருபுறம் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம், மறுபுறம் சூறாவளி. மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களையெல்லாம் அனுப்புகிறார்கள். ரெயில்வே அமைச்சகத்திற்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை?

 

அவர்கள் அனுப்புவதற்கு முன்பு மாநில அரசுகளை அணுக வேண்டும். அவர்கள் ஏன் எங்களை கலந்தாலோசிக்கவில்லை? அவர்கள் எங்கள் அட்டவணையைப் பின்பற்றவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக வசதியானதை செய்கிறார்கள், பலவந்தமாக செய்கிறார்கள். இது மேற்குவங்காளத்திற்கு சிக்கலை ஏற்படுவதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் ஒரு இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்’’என கூறினார்.

மம்தா  புலம்பெயர்ந்தோர் மீதான தனது பொறுப்பைக் தட்டி கழிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது   புலம்பெயர்ந்தோருக்கு சிகிச்சையளித்தல், சோதனை செய்தல் அல்லது தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் பொறுப்பை மம்தா பானர்ஜி ஏற்க விரும்பவில்லை.
 

click me!