திருமணமான ஒரு மாதத்தில் விமான பணிப்பெண் செய்த காரியம்: கணவர் கடைக்கு போயிட்டு வர கேப்பில் மோசம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2020, 11:44 AM IST
Highlights

இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14ந் தேதி திருமணம் நடந்தது. சரண்குமார் சாப்பிட உணவு வாங்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு  பூட்டி கிடந்தது.

மீனம்பாக்கத்தில்  திருமணம் ஆன ஒரே மாதத்தில் விமான பணிப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மீனம்பாக்கம்  ஏர்-இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் சரண்குமார்(30). கப்பல் நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். இவரது  மனைவி பெயர் அன்பரசி(28). இவர் விமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14ந் தேதி திருமணம் நடந்தது. சரண்குமார் சாப்பிட உணவு வாங்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு  பூட்டி கிடந்தது. 

பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் அன்பரசி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அன்பரசியின்  சகோதரர் அரவிந்த் மீனம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். மீனம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று அன்பரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாரகள். குடும்ப தகராறு காரணமாக அன்பரசி  தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிப்பெண் என்பதால் விமான நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் யாராவது தொல்லை தந்தார்களா வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என கணவன் சரண்குமாரிடம்  போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றார்கள். திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

 

click me!