நன்கு தேறிவரும் விஜயகாந்த் உடல்நிலை..!! குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

By vinoth kumarFirst Published Mar 11, 2019, 3:02 PM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொடர்ந்து கவலையான தகவல்கள் பரவி வந்த நிலையில், மீண்டும் அவர் பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திடும்போது கேப்டன் கம்பீரமாக காட்சியளித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொடர்ந்து கவலையான தகவல்கள் பரவி வந்த நிலையில், மீண்டும் அவர் பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திடும்போது கேப்டன் கம்பீரமாக காட்சியளித்தார். 

சிங்கமாக முழங்கி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியதால் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். அவரது உடல்நலம் அப்போதும் குணமடையாததால் அவரது கட்சி நிர்வாகிகளிடையே சுணக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் மீண்டும் இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 

இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை 3 அளவில் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். அப்போது அவரது உடல்நலம் தேறாததால் 10 மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டதாகக் தகவல் வெளியாகின. முழுமையாக குணமடையாத விஜயகாந்த்தை தேர்தலுக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டனர் என பேச்சுகள் பரவின.

இதனையடுத்து தேர்தல் கூட்டணி குறித்து பேச பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ்கோயல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ரஜினி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்த வீட்டிற்கு சென்று நலம் சந்தித்து நலம் விசாரித்தனர்.  அவர்களை எழுந்து நின்று வரவேற்கக் கூடிய நிலையில் கூட விஜயகாந்த் இல்லை. நிதானமாக இல்லை எனக் கூறப்பட்டது. அவர்கள் சந்தித்த போது வெளியான புகைப்படங்களும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்த சந்தேகத்தை கிளறியது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தருவது மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார். இதனையடுத்து நேற்று அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். தற்போது பழைய ஃபார்முக்கு விஜயகாந்த் திரும்பி விட்டதால் அவரது தொண்டர்களும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!