மீண்டும் அதிமுக முன்னிலை ! இரண்டாவது சுற்றில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் !!

By Selvanayagam PFirst Published Aug 9, 2019, 9:25 AM IST
Highlights

வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில்  ஒவ்வொரு சுற்றிலும் திமுக - அதிமுக இடையே தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. 2 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 6438 வாக்குகள் முன்னிலை பெறுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றுக்கள் முடிவில் ,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 483 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  அதிமுக - 21,660, திமுக - 21,177, நாம் தமிழர் - 400 வாக்குகள் பெற்றுள்ளன.

இந்நிலையில் இரண்டாவது சுற்று முடிவில்  அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 51 324 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 44 888 வாக்குள் பெற்று இரண்டாவது இட்த்தில் உள்ளார். வித்தியாசம் 6438 வாக்குகள்.

click me!