வீரபாண்டி தொகுதி வேட்பாளர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு... அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!

Published : Apr 14, 2021, 11:26 AM IST
வீரபாண்டி தொகுதி வேட்பாளர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு... அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!

சுருக்கம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் தருண், அதிமுக தரப்பில் ராஜமுத்து, அமமுக சார்பில் எஸ்.கே.செல்வம், நாதக வேட்பாளர் ராஜேஷ்குமார், ஐஜேகே வேட்பாளர் அமுதா மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 பேர் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மோகன் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் கழிவறைக்கு சென்றபோது வேட்பாளர் மோகன் வழக்கி விழுந்தார். தலையிலும், இடுப்பிலும் பலத்த காயம் அடைந்த மோகன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்தல் இசல்ட் வெளிவரு முன்பே இறக்கும் சூழலில் தேர்தல் முடிவுகளை அறியாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?