அக்னி கலசத்தையா அசிங்கப்படுத்துகிறாய் இத்தோடு நிறுத்திக் கொள்... திமுக எம்.பிக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை.!

By Thiraviaraj RMFirst Published Jul 7, 2020, 6:46 PM IST
Highlights

வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து இழிவு படுத்துவதாக குற்றம்சாட்டி திமுக எம்.பி செந்தில் குமாருக்கு வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து இழிவு படுத்துவதாக குற்றம்சாட்டி திமுக எம்.பி செந்தில் குமாருக்கு வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

திமுகவைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த செந்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட மருத்துவர் அன்புமணிக்கு எதிராக கடுமையான பிரசாரம் செய்தார். அப்போது நான் வடிவேல் கவுண்டரின் பேரன், அன்புமணியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான் என தேர்தல் முடியும் வரை சமுதாயம் பெயரை சொல்லி வாக்கு கேட்டார். 

வெற்றிபெற்ற பிறகு அவர் சார்ந்த சமுதாய மக்கள் குறித்து எதிர்கருத்துகளை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் பாமக அன்புமணி ராமதாஸ் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சில தினங்களுக்கு முன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் இணைய வழியான கூட்டத்தில் கலந்து உரையாடும்போது, நானும் இந்த சமூகத்தின் மீது பற்று உள்ளவர் தான் என கூறியதோடு, தன் கையில் வன்னிய சமுதாயத்தின் அடையாளமாக பார்க்கப்படும் அக்னி கலசத்தினை பச்சை குத்தியிருப்பதை அனைவருக்கும் காட்டினார்.

சின்ன வயசுல தடுப்பு ஊசி போட்டா சின்னதா ஒரு தழும்பு இருக்கும்

இதே உங்க பெற்றோர் சின்ன வயசுல
சொல்லி கொடுக்கவில்லை என்றால்
இப்படி தான் ஒரு நாள் இவ்வளவு
கையில வரும்

இந்த சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே pic.twitter.com/YoAolFF3Ki

— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD)

 

இந்த புகைப்படத்தை தனது பக்கத்தில் டேக் செய்து பதிவிட்ட செந்தில்,  சாதிமறுப்பு சமூகநீதி கொள்கைகளை பெற்றோர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் மனதில் உள்ள "அசுத்தம்" இப்படித்தான் ஒருநாள் இவ்வளவு பெரிய தளும்பா வரும் என்று கூறியுள்ளார். வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாகவே பார்க்கப்படும் அக்னி கலசத்தினை களங்கப்படுத்தியதை அடுத்து, அவருக்கு அவருடைய பதிவிலேயே கடுமையான கண்டனங்கள் வன்னியர்கள் தெரிவித்து வருகின்றனர். வன்னியர்களை களங்கப்படுத்திய திமுக எம்பி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? திமுக எம்பி மன்னிப்பு கேட்பாரா என கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி,  திமுக எம்.பி., செந்தில்குமாருக்கு முகநூலில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அதில், "நம் குலதெய்வம்" மருத்துவர் அய்யா அவர்கள் இது தான் நமது அடையாளம் என ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் காட்டிய "அக்னி கலசத்தையும், "இளைஞர்களின் எதிர்காலம்" அண்ணன் சின்ன அய்யா அவர்களையும் கலங்கப்படுத்தி பதிவிட்ட திமுக-வைச் சேர்ந்த தருமபுரி. செந்தில்குமாரை கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் கடுமையாக எச்சரிக்கிறோம்.

இனி இதுபோன்று வன்னியர்களைப் பற்றியோ, எங்களின் தலைவர்கள் பற்றியோ கலங்கப்படுத்தி சமூக வளைதலங்களில் ஏதேனும் பதிவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்!!" எனத் தெரிவித்துள்ளார். 

click me!