சிவகங்கையை கலங்கடிக்கும் கொரோனா... எஸ்.பி. ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று

By Thiraviaraj RMFirst Published Jul 7, 2020, 4:50 PM IST
Highlights

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 217 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அம்மாவட்ட எஸ்.பி ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

click me!