
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றார். மேலும் தினகரன் தன் கட்சியின் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் நிவாரணத்தை வாரி வழங்கி வருகிறார்.
இன்று நெல்லையில் இருந்து திருக்குறுங்குடி கெஸ்ட் ஹவுஸுக்கு தினகரன் பயணமாகிக்கொண்டிருந்தார். அதேவேளையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நாங்குநேரியில் நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நெல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.