டீ விற்றவர் முதலமைச்சராகும் போது நன்றாக படித்த நாஞ்சில் சம்பத்  முதலமைச்சராகக் கூடாதா ? டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் கேள்வி ?

Asianet News Tamil  
Published : Aug 24, 2017, 07:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
டீ விற்றவர் முதலமைச்சராகும் போது நன்றாக படித்த நாஞ்சில் சம்பத்  முதலமைச்சராகக் கூடாதா ? டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் கேள்வி ?

சுருக்கம்

ttv support mla in puducherry

டீக்கடை நடத்தி வந்த ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக  இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுடன் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

சசிகலா குடும்பம் ஆட்சியிலும், கட்சியிலும் இருந்து முழுமையாக விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் அண்மையில் இணைந்தன.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவில்லை என தமிழக ஆளுநரிடம் தெரிவித்தனர்.

தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை அடுத்துள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக திமுக கூட்டணி அமையுமா? விஜயை பழிவாங்க நடக்கப்போகும் ட்விஸ்ட்? தாய் கழகத்துடன் கை கோர்க்குமா அதிமுக?
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!