டீ விற்றவர் முதலமைச்சராகும் போது நன்றாக படித்த நாஞ்சில் சம்பத்  முதலமைச்சராகக் கூடாதா ? டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் கேள்வி ?

Asianet News Tamil  
Published : Aug 24, 2017, 07:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
டீ விற்றவர் முதலமைச்சராகும் போது நன்றாக படித்த நாஞ்சில் சம்பத்  முதலமைச்சராகக் கூடாதா ? டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் கேள்வி ?

சுருக்கம்

ttv support mla in puducherry

டீக்கடை நடத்தி வந்த ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக  இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுடன் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

சசிகலா குடும்பம் ஆட்சியிலும், கட்சியிலும் இருந்து முழுமையாக விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் அண்மையில் இணைந்தன.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவில்லை என தமிழக ஆளுநரிடம் தெரிவித்தனர்.

தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை அடுத்துள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!