உள்ளாட்சி தேர்தல் களத்தில் எத்தனை பேர்..? வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

By manimegalai aFirst Published Sep 26, 2021, 7:20 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்க இருக்கிறது. தென்காசி, விழுப்புரம், நெல்லை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந் நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளதாவது: மொத்தம் 79433 பேர், 23,998 பதவிகளுக்கு களத்தில் உள்ளனர்.

2981 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 14,571 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளது.

click me!