தமிழிசை தெலுங்கிசையாக மாறத் திணறல்... 15 இப்போ 90 ஆச்சு உய்யாலோ..!

By Thiraviaraj RMFirst Published Nov 1, 2019, 12:17 PM IST
Highlights

 50 நாட்களாகியும் அவர் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே மேடைகளில் சில வார்த்தைகள் மட்டுமே ஆரம்பத்தில் தெலுங்கில் பேசும் அவர் அடுத்து ஆங்கிலத்தில் உரையை தொடர்கிறார். 

இன்னும் மூன்றே மாதங்களில் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு பேசுவேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியாக தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள முஷீராபாத் பகுதியில் கடந்த 3 நாட்களாக மகளிர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கில் சில வார்த்தைகள் பேசிய பிறகு ஆங்கிலத்தில் பேசினார். ’’மகளிர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதில் முன்னேற வேண்டும். எந்தவொரு துறையை தேர்வு செய்தாலும், அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்திலும், சுகாதாரத்திலும் பெண்கள் அக்கறை செலுத்துவது அவசியம். இன்னும் மூன்றே மாதங்களில் தெலுங்கு மொழியில் பேசுவேன் என உறுதி கூறினார். 

கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதியே ‘’அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போகிறேன்’ எனத் தெரிவித்து இருந்தார். ஆனால் 50 நாட்களாகியும் அவர் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே மேடைகளில் சில வார்த்தைகள் மட்டுமே ஆரம்பத்தில் தெலுங்கில் பேசும் அவர் அடுத்து ஆங்கிலத்தில் உரையை தொடர்கிறார். இந்நிலையில் தற்போது, மீண்டும் 90 நாட்களில் அவர் தெலுங்கு கற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் அவர் எளிதாக கற்றுக்கொள்ளலாம் என நினைத்த தெலுங்கு மொழியை கற்றுக் கொள்ளத் திணறி வருவதாக தெரிகிறது. தமிழிசை, தெலுங்கிசையாக மாறுவது அத்தனை எளிதான காரியமா..? 

click me!