இது மனசாட்சியற்ற செயல்... கொதிக்கும் டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2021, 12:13 PM IST
Highlights

நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை, அதிகாரத்தை வைத்து மிரட்டுகிற தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை ஏற்க முடியாது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 

நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை, அதிகாரத்தை வைத்து மிரட்டுகிற தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை ஏற்க முடியாது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசு மருத்துவக்கல்லூரிகளை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக மாணவர்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதாக, மாணவர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில், கல்லூரியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில்,அரசு மருத்துவக்கல்லூரிகளைப் போன்றே கட்டணம் வசூலிக்கவேண்டுமென்று கோரி போராடிவரும் மருத்துவ மாணவர்களை விடுதிகளைவிட்டு வெளியேற்றுவதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை.

நியாயமான கோரிக்கைக்காக போராடும் மருத்துவ மாணவர்களை, அதிகாரத்தை வைத்து மிரட்டுகிற தமிழக அரசின் மனசாட்சியற்ற செயலை ஏற்க முடியாது. உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

click me!