அட... அடடா..! இனி 10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாதா..?

By Thiraviaraj RMFirst Published Feb 12, 2021, 4:00 PM IST
Highlights

தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.


“புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வந்தால் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்ட ஒரு செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதுகுறித்து எந்த ஆய்வும் இல்லாமல் அனைவரும் பகிர்ந்துவருகின்றனர்.

தற்போது இப்படியான ஒரு அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடவில்லை. இது யாரோ பரப்பிய போலிச்செய்தி என அரசுத் தரப்பு செய்தி நிறுவனமான PIB (Press Information Bureau) மறுத்துள்ளது. இதுபோன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

click me!