அதிரடி களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம் - வடசென்னை இணை ஆணையர் பணியிடமாற்றம்..!

 
Published : Dec 18, 2017, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
அதிரடி களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம் - வடசென்னை இணை ஆணையர் பணியிடமாற்றம்..!

சுருக்கம்

The Commissioner of Local Authority has issued a change to the Commissioner of the Sudan.

வடசென்னை இணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போக்குவரத்து இணை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.

ஆனால் அதிமுகவை சேர்ந்த மதுசூதனனும் டிடிவியும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே திமுக இரு தரப்பின் மீதும் புகார்களை அள்ளி வீசுகிறது. 

இந்நிலையில், வடசென்னை இணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போக்குவரத்து இணை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!