நடிகை ரோஜா வீட்டில் நகையை திருடிய கொள்ளையர்கள்...! இத்தனை லட்சம் மதிப்பாம்?

 
Published : Jan 22, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நடிகை ரோஜா வீட்டில் நகையை திருடிய கொள்ளையர்கள்...! இத்தனை லட்சம் மதிப்பாம்?

சுருக்கம்

The actress Rose complained about the jewelery stolen at home

ஐதராபாத்தில் உள்ள நடிகை ரோஜா வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது.  

செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழிலும் பிரேம தவசு என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. 

இவர் ஆந்திரமாநிலம் கடப்பாவில் பிறந்தார். இதுவரை ஏராளமான படங்களில் நடித்து முன்னனி நடிகை என்று வலம் வந்தார். 

சினிமா, தொலைக்காட்சி என்றில்லாமல் அரசியலிலும் கால் பதித்து வெற்றி கண்டார். தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளார். 

இவருக்கு ஐதராபாத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ரோஜா வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்த நகை திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் நடிகை ரோஜா புகார் அளித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!