ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களமிறங்க தயார்... தேர்தல் களத்தை தெறிக்கவிடும் தங்கத் தமிழ்ச்செல்வன்..!

By Asianet TamilFirst Published Feb 7, 2021, 8:46 PM IST
Highlights

தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 
 

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் என 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகள் திமுக வசமும் போடி. கம்பம் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே காய்களை நகர்த்திவருகின்றன. அதற்கேற்ப திமுக தரப்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 
இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட தங்கத்தமிழ்ச் செல்வன் தயார் என அறிவித்துள்ளார்.  “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடுவேன். போட்டியிடும் தொகுதி எது என்பது முக்கியமல்ல. வெற்றி மட்டுமே திமுகவின் நோக்கம்.” என்று தெரிவித்துள்ளார். 
அதிமுகவில் இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வமும் தங்கத் தமிழ்ச்செல்வனும் எதிரும் புதிருமான இருந்தனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு முகாமில் இருப்பதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருவரும் தங்கள் பலத்தைத் தேனியில் முழுமையாக காட்ட முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!