எச்.ராஜா இப்படியே பேசினால் பதற்றம் அதிகரிக்கும்.. எச்சரிக்கும் விடுதலை சிறுத்தைகள்..

By Ezhilarasan BabuFirst Published May 24, 2021, 5:48 PM IST
Highlights

அவரது பேச்சு தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அவதூறு செய்வதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்வதும் எச்.ராஜாவுக்கு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. 

பேராசிரியர் ஜவாஹிருல்லா, அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் எச். ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்த கட்சியை வெளியிட்டுள்ளார் அறிக்கையின் விவரம்: 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச்.ராஜா அவர்கள் அண்மையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு எதிராக அபாண்டமான முறையில் அவதூறு செய்து பேட்டியளித்துள்ளார். ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற அல்-உம்மா வோட ஆளு இன்னைக்கு பாபநாசம் எம்எல்ஏ என்று பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அத்துடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எதிராக கோவிலைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு உரிமை இல்லை, அவர் நிதி மந்திரி, அவரை அவன் இவன் என்று பேசுவதற்கு எனக்கு முடியாதா என்று கேட்டுள்ளார். எச். ராஜா. 

வெளிநாட்டில் படித்துவிட்டு, வெளிநாட்டில் திருமணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தியவர் தமிழனா இருக்க முடியாது, அவர் ஒரு தமிழனே கிடையாது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், அமைச்சருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அவதூறு செய்வதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்வதும் எச்.ராஜாவுக்கு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவர் இழிவுபடுத்தி பேசியதையும், அவர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக மன்னிப்பு கோரியதையும் நாடே அறியும்.

தொடர்ந்து அவரை இப்படி பேச அனுமதித்தால் சமூகத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படும், தமிழக அரசும் மக்களும் கொரோனா பேராபத்தை எதிர் கொள்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் எச். ராஜாவின் இத்தகைய பேச்சுக்கள் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், அரசின் செயல்பாடுகளையும், மக்களின் கவனத்தையும் திசை திருப்புவதாக இருக்கிறது. எனவே பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பேசியுள்ள அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரை சிறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!