”தமிழ்” மேல உள்ள ஆர்வத்துல ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்த காரியம்..! என்ன தெரியுமா?

Asianet News Tamil  
Published : Nov 08, 2017, 02:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
”தமிழ்” மேல உள்ள ஆர்வத்துல ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்த காரியம்..! என்ன தெரியுமா?

சுருக்கம்

tamilnadu governor banwarilal purohit leaning tamil

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தி, மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினார். தமிழ் கற்றுக்கொண்டால் தமிழக மக்களுடன் தொடர்பு கொள்வது எளிமையாக இருக்கும் என்பதால் செம்மொழியான தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்பினார்.

இதையடுத்து தமிழாசிரியர் ஒருவர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ் கற்றுக்கொடுக்கிறார் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை கற்க விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ்..! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் தொடங்கியதா?
NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!